மாமியார் மனைவியுடன் சேர்ந்து மது..மறுநாள் மருமகன்,மாமியாருக்கு நேர்ந்த சோகம்

x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, மதுபோதையில் இருந்த மாமியார், மருமகன் ஆகியோர் சந்தேகமான முறையில் உயிரிழந்தனர்.

பெருக்கரணை இருளர் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவர், தனது மனைவி அஞ்சலி, மாமியார் வசந்தா ஆகியோருடன் இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், உள்ளே சென்று பார்த்த போது, சின்னதம்பி, அவரது மாமியார் வசந்தா ஆகியோர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், அஞ்சலி கவலைக்கிடமாக இருந்தது கண்டறியப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சித்தாமூர் போலீசார், அஞ்சலியை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சின்ன தம்பி, வசந்தா ஆகியோரின் உடல்களை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்