"ஜே.என்.யூ பல்கலை. தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

x
  • ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில், தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
  • தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களை அடித்து நொறுக்கியுள்ள ABVP அமைப்பினரின் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும், பல்கலைக் கழக நிர்வாகம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
  • தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என விமர்சித்துள்ள முதலமைச்சர், பா.ஜ.க அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும்போதெல்லாம் ஜே.என்.யூ. பல்கலைக்கழகப் பாதுகாப்புப் பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை பார்ப்பதாகக் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்