நகை வாங்குவது போல் நடித்து நைசாக பாக்கெட்டுக்குள் சுருட்டிய நபர் - பரபரப்பு சிசிடிவி காட்சி

x

மார்த்தாண்டத்தில், நகை வாங்குவது போல் நாடகமாடி ஒன்றே கால் சவரன் நகையை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காப்புகாடு பகுதியை சேர்ந்த விஜூ என்பவர், மார்த்தாண்டம், குன்னத்தூர் பகுதிகளில் நகைக் கடை நடத்தி வருகிறார். நகைகளை சரிபார்த்த போது, 10 கிராம் நகை குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜூ, சிசிடிவி காட்சிளை ஆய்வு செய்தார். அதில், நகை வாங்குவது போல் நாடகமாடிய அடையாளம் தெரியாத இருவர், நகையை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. மேலும், குன்னதூரில் உள்ள மற்றொரு கடைக்கும் சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குப் பதிவு செய்த மார்த்தாண்டம் போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்