"நகைகளை கழட்டி வீட்டில் வச்சிட்டு வாங்க" நம்பிய மூதாட்டிக்கு ஆப்பு வைத்த மர்ம பெண் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நூதன முறையில் மூதாட்டியிடம் 7 அரை சவரன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஜங்களாபுரம் பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஜெயம்மாள் என்பவரிடம் முதியோர் உதவி தொகை வாங்கி தருவதாகவும், நகைகளை கலட்டி வீட்டில் வைத்து விட்டு வரும் படியும் பெண் ஒருவர் கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி நகைகளை வீட்டில் வைத்துவிட்டு பெண்ணுடன் ஜோலார்பேட்டை சென்றுள்ளார். பின்னர் தனது மணிபர்சை வீட்டில் வைத்து விட்டு வந்தாக கூறி மூதாட்டியின் வீட்டு சாவியை வாங்கி சென்று பெண் நகைகளை திருடி சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் மூதாட்டி வீட்டின் அருகே உள்ள சிசிடிவியை கொண்டு நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்