அதிமுக கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு - மர்ம நபர்கள் துணிகரம்

x

திருவள்ளூர் அருகே, அதிமுக கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டன. பெரியகுப்பம் கம்பர் தெருவைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் மனைவி சித்ரா, அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார்.

மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சித்ரா, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, இரண்டாயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் போலீசார், கொள்ளையரைத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்