மொத்தமா ஒரே கும்பிடு... அம்மன் கழுத்தில் மாயமான தாலி... பரபரப்பு சிசிடிவி காட்சி

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர், அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி சங்கிலியை திருடி சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மீனாட்சிபுரத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், கோயில் பிரகாரத்தை சுற்றி வந்துள்ளார். பின்னர், அம்மனை வழிபடுவது போல் கருவறைக்குள் சென்று, அம்மனின் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி சங்கிலி மற்றும் பூஜை தட்டில் இருந்த பணம் ஆகியவற்றை திருடி சென்றார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்