சென்னையை உலுக்கிய நகை கொள்ளை - தங்கத்துடன் சிக்கிய முக்கிய நபர்

x

சென்னை பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் கடந்த மாதம் 10ஆம் தேதி நடந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 9 கிலோ தங்க நகைகள், 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய கொள்ளையனான கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய 2 பேரும் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் வசமிருந்த இரண்டரை கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இந்த வழக்கில் கஜேந்திரன், திவாகரன், கங்காதரனின் மனைவி கீதா, மைத்துனர் ராகவேந்திரர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, வழக்கில் தலைமறைவாக இருந்த அருண் மற்றும் கவுதமை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் இதில் அருண் போலீசில் பிடிபட்டார். அவரிடம் இருந்து 750 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு மொத்தம் 5 கிலோ 850 கிராம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கொள்ளையன் கவுதமை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்