பஸ் ஸ்டாப்பில் நின்ற இளைஞரின் மேல் மோதிய ஜேசிபி- கால் சிதைந்த கொடுமை... கண்ணீர் வடிக்கும் குடும்பம்

x

தரமணி அருகே ஜேசிபி வாகனம் இடித்ததில் இளைஞரின் கால் சிதைந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயராஜ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தரமணி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, எதிர் திசையில் இருந்த வந்த ஜேசிபி வாகனம் இவர் மீது இடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த விஜயராஜின் கால் சிதைந்து விட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து ஏற்படுத்தியவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்