நாட்டுக்கே '1' ஓட்டின் பவரை காட்டிய ஜெயலலிதா.. அதிர்ந்த அப்போதையை வாஜ்பாய் தலைமையிலான அரசு

x

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த தினம் இன்று.

1998 பொதுத் தேர்தலில் அதிமுக, திரினமுல் காங்கிரஸ் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட 19 கட்சிகளுன் கூட்டணி அமைத்து வாஜ்பாய் தலைமையில் பாஜக போட்டியிட்டது. 182 தொகுதிகளில் பாஜக வென்றது.

கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேசிய ஜனனாயக கூட்டணிக்கு மொத்தம் 261 இடங்கள் கிடைதத்தது. ஆனால் பெரும்பான்மை பலம் பெற 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் தொங்கு நாடாளுமன்றம் உருவானது.

இதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் 12 எம்.பிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது.

வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார். அதிமுகவின் தம்பித்துரை

சட்ட அமைச்சராகவும், கடம்பூர் ஜனார்த்தனன், நிதித் துறையின் இணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசு, ஜெயலலிதா மீது சொத்து வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை தொடுத்திருந்தது. இதனால் அரசியல் சட்ட பிரிவு 356ஐ பயன்படுத்தி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வாஜ்பாய் அரசுக்கு முதல் நாளில் இருந்து ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்.

ஆனால் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விளைவாக, மாநில அரசுகளை இஸ்டத்துக்கு கலைக்கும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டிருந்தால், வாஜ்பாயி

அரசினால் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்க முடியவில்லை.

1999 ஏப்ரலில் டெல்லியில் சுப்ரமணிய சுவாமி அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா, அங்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். இதைத் தொடர்ந்து வாஜ்பாய்அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்து, அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து வாஜ்பாய் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீதான வாக்கெடுப்பு நடந்தது. வாஜ்பாய் அர்சுக்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 270 வாக்குகளும் பதிவாகின. வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்த தினம், 1999 ஏப்ரல் 17.



Next Story

மேலும் செய்திகள்