"ஜெ., வெளிநாடு சிகிச்சை - மாறுபட்ட கருத்துகள்" -ஜெ தீபக் வாக்குமூலம் | J.Deepak | Jayalalitha Report

x

உயர் மருத்துவச் சிகிச்சைக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல அப்பல்லோ மருத்துவமனையும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் தடையாக இருந்தது தெரியவந்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துசெல்வது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவியதாக கூறப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு செயலாளர்களும் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என கூறியதற்கு

மருத்துவர் ரிச்சர்ட் பீலே தற்போதைக்கு தேவையில்லை என்று கூறியதாக ஜெ தீபக் தனது வாக்கு மூலத்தில் பதிவுசெய்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க அமைச்சரவையின் தீர்மானம் அவசியம் என்பது சுகாதாரத்துறை செயலாளருக்கு தெரிந்திருக்கும் எனவும்

அது தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் தெரியவந்துள்ளதாகவும்,

ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது அது இந்திய மருத்துவர்களை அவமதிப்பது போல என ராதாகிருஷ்ணன் கூறியது வியக்கத்தக்காத உள்ளதாக ஆறுமுகசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன், மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் தான் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு தடையாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்