அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஜெயக்குமார் பதிலடி..

x


முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சித்திருந்த எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தங்கம் தென்னரசுவுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்..

அந்த அறிக்கையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முறையாக பதில் கூறாமல், அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் மிரட்டிப் பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்ததாக தெரிவித்துள்ள அவர், சிறந்த நிர்வாகத்தில் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் இருந்ததாக கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில், தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்ததால், தொழில் நிறுவனங்கள் போட்டிப்போட்டு தமிழகம் நோக்கி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு நேரடியான விளக்கத்தை அளிக்குமாறும் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்