ஈரோடு இடைத்தேர்தல்.. கண் முன்னே 2 சவால் - எப்படி சமாளிப்பார் ஈபிஎஸ்? - ஜெயக்குமார் பதில்

ஈரோடு இடைத்தேர்தல்.. கண் முன்னே 2 சவால் - எப்படி சமாளிப்பார் ஈபிஎஸ்? - ஜெயக்குமார் பதில்
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என நேற்றே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதிமுக கூட்டணியில் மட்டுமே சிக்கல் நீடித்தது. தற்போது காங்கிரசுடன் நேரடியாக மோதப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது. இது அரசியல் களத்தில் அனலைத் திரட்டியுள்ளது. ஆனால் இங்கே தான் உண்மையான சவாலே ஆரம்பித்துள்ளது.

தங்கள் தரப்பு தான் உண்மையான அதிமுக என ஓபிஎஸ் ஒருபுறம் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். வரும் 23ம் தேதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க ஓபிஎஸ் முடிவெடுத்துள்ளார். அதில் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது நடந்தால், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்ற விடை தெரியா கேள்வியெழுந்துள்ளது. இந்த இரண்டு சவால்களும் ஈபிஎஸ்-க்கு இருக்கிறது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கிறார் மூத்த நிர்வாகி ஜெயக்குமார். மேலும் பல தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்