ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிய ஜப்பானியர்கள்..

x

ர ாமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் நாட்டினர் வழிபாடு நடத்தினர். ராமேஸ்வரம் கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், டோக்கியோவை சேர்ந்த பெண்கள் உட்பட 37 பேர், ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தனர். அங்குள்ள அக்னி தீர்த்த கடற்கரையிலும், கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் அவர்கள் நீராடினர். இதைத்தொடர்ந்து, ராமநாதசுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்