ஜெ.அன்பழகன் பேத்தியின் பரதநாட்டியம்.. கண்ணை எடுக்காமல் பார்த்த துர்கா ஸ்டாலின்..!

இரண்டு மணி நேரம் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் முழுமையாக கண்டு ரசித்தார். சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் பேத்தியும், மாமன்ற உறுப்பினர் ராஜா அன்பழகனின் மகளுமான ஓவியாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்டு களித்தனர். 

X

Thanthi TV
www.thanthitv.com