மாயமான பெண் கொடூர கொலை... பல துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் புதைப்பு.. போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த கில்லர்

x
  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில், 30 வயது பெண்ணைக் கொன்று, உடலை பல துண்டுகளாக வெட்டி, வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • புட்காம் பகுதியை சேர்ந்த தன்வீர் அகமது கான் என்பவர், கடந்த 8ம் தேதி தனது சகோதரி மாயமானதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
  • பயிற்சி வகுப்புக்கு சென்ற சகோதரி வீடு திரும்பவில்லை என புகாரில் குறிப்பிட்டிருந்த நிலையில், அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
  • இதனிடையே, மயாமான பெண்ணின் சகோதரர் தன்வீர் அகமது கான் அளித்த தகவலின் பேரில், சந்தேகத்திற்கு இடமான சிலரிடம் போலீசார், தங்களது பாணியில் விசாரணை நடத்தினர்.
  • அதில், ஷபீர் அகமது வானி என்பவர், மாயமான பெண்ணை கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
  • கொலையை மறைக்க, பெண்ணின் உடல் பாகங்களை துண்டு துண்டுகளாக வெட்டி, பல்வேறு இடங்களில் புதைத்து வைத்ததாக கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • அதனைத் தொடர்ந்து ஆங்காங்கே புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை, ஷபிர் அகமதுவை வைத்து, போலீசார் மீட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்