சிறை தண்டனை - உயர்நீதிமன்றம் சென்ற லிங்குசாமி

x

காசோலை மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து, இயக்குநர் லிங்குசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றை தயாரிப்பதற்காக, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக, பி.வி.பி கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து, ஒரு கோடியே 3 லட்ச ரூபாயை இயக்குனர் லிங்குசாமியும், அவரது சகோதரரும் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. அந்த கடனைத் திருப்பிச் செலுத்த லிங்குசாமி கொடுத்த ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை, வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிவிபி நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்