கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் சந்திப்பதற்கு சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

x

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை என வாரத்தில் 2 நாள்கள் பார்வையாளர்கள் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது.

அதன் பிறகு, 2 செவ்வாய் மற்றும் 2 வியாழக்கிழமை என 4 நாட்களில் 25 பேர் அவரை சிறையில் சந்தித்தனர்.

இதனால், அசௌகரியமான சூழல் ஏற்படுவதாக கூறி, வியாழக்கிழமை முதல் ஒரு மாதத்துக்கு அவரை பார்வையாளர்கள் சந்திப்பதற்கு தடை விதித்து கடலூர் மத்திய சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்