இந்தியாவின் 14 வது குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றுகொண்டார்

x

கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெக்தீப் தன்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்டு எதிர்க்கட்சி வேட்பாளர் மார்க்கெட் ஆல்வாவை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கர் இந்தியாவின் 14 வது குடியரசு துணைத் தலைவராக இன்று பதவி யெற்று கொள்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நண்பகல் 12 மணியளவில் ஜக்தீப் தன்கருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

முன்னதாக பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் ஜெகதீப் தன்கர்.


Next Story

மேலும் செய்திகள்