"போயஸ் இல்லத்தை முறையாக பராமரிக்கவில்லை" - புகைப்படங்களை வெளியிட்ட ஜெ.தீபா

x

ஜெயல‌லிதா மறைவுக்கு பின் போயஸ் இல்லத்தை ச‌சிகலா மற்றும் அதிமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை என ஜெ.தீபா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஜெ.தீபா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெயல‌லிதா இறந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் குடும்ப சொத்துக்களைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.. மேலும், ஜெயல‌லிதா மறைவுக்கு பின் ச‌சிகலா தரப்போ, அதிமுக அரசோ போயஸ் இல்லத்தை முறையாக பராமரிக்கவில்லை என்றும், கடந்த சில மாதங்களாக இரவு, பகலாக கடுமையாக பணியாற்றி போயஸ் இல்லத்தை சுத்தம் செய்துள்ளதாக தீபா தெரிவித்துள்ளார். போயஸ் இல்லத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, பாழைய மரச்சாமான்களையும், குப்பைகளை மட்டுமே குவித்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ள தீபா, தற்போது போயஸ் இல்லம் ஒரு சாதாரண வீடு போல்தான் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், போயஸ் இல்லத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களையும் ஜெ.தீபா வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்