ஜெ.தீபா- மாதவன் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா... ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் நேரில் வாழ்த்து

x

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா மாதவன் தம்பதியரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினரும் , பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டு ஜெ.தீபாவின் குழந்தைக்கு தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்தினார்.

ஜெ.தீபா தமது கணவர் மாதவனுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்று தங்கள் மகளின் பெயர் சூட்டு விழாவிற்கு நேரில் அழைப்பு விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்