செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் IT ரெய்டு... "என்னை கைது செய்ய வாய்ப்பு..?" - சவுக்கு சங்கர் ட்வீட்டால் பரபரப்பு

x

கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் அளித்த புகார் தொடர்பாக, தான் கைது செய்யப்படலாம் என, யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையின் போது, அதிகாரிகள் தாக்கப்பட்டது குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக, கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் புகார் அளித்தார். இது தொடர்பாக ட்வீட் வெளியிட்ட சவுக்கு சங்கர், அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு எஸ்.பி., சுந்தரவதனம் உதவி செய்தார் எனவும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததுடன், உண்மையான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றால், குற்றப்பத்திரிகையில் சுந்தரவதனத்தின் பெயரும் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்