மெர்க்கன்டைல் வங்கியில் ஐ.டி ரெய்டு...20 மணி நேரத்திற்கும் மேல் சோதனை - சிக்கிய முக்கிய ஆவணங்கள்

x

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு இந்தியா முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. தூத்துக்குடி வி.இ.ரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர். வங்கியின் வரவு, செலவு மற்றும் பண பரிவர்த்தணை தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், வங்கியிலிருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்