IT அதிகாரிகள் கார் கண்ணாடி உடைப்பு... "உரிய பாதுகாப்பு அளிக்காத எஸ்பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஜெயக்குமார்

x

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத எஸ்பி மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கரூரில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திமுகவினரின் எதிர்ப்பால் அதிகாரிகளால் தொடர்ந்து சோதனை செய்ய முடியாத சூழல் உருவானது. இந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத கரூர் எஸ்.பி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்