செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் அதிரடியாக இறங்கிய IT அதிகாரிகள்...கோவையில் பரபரப்பு | IT Raid

x

கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்கள் மட்டும் நண்பர்களின் இல்லங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டனர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த், இல்லத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், வீட்டில் இருந்த ஒரு அறையை பூட்டி சீல் வைத்து சென்றனர். அதேபோல பீளமேடு பகுதியிலும் உள்ள ஒரு வீட்டிற்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அரவிந்த் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அறைக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் இரும்பு கம்பி உரிமையாளர் ஒருவரின் அலுவலகம் மற்றும் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்