தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - தேவர் குருபூஜையில் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்

x

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆம் ஆண்டு ஜெயந்தி விழாவும், 60வது குரு பூஜையும் வரும் 30ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த தேவர் குரு பூஜையில் கலந்துக் கொள்ளும்படி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து, ராமநாதபுர மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாஜக சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும், இதற்காக நாளை மறுநாள் அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.


Next Story

மேலும் செய்திகள்