சிக்கன் ரைஸ் சாப்பிட்டு இரவு தூங்க சென்ற ஐடி ஊழியர் காலையில் பலி.. உறுப்புகள் ஆராய்ச்சிக்கு அனுப்பி வைப்பு.. கதறும் மனைவி

x
  • ஆரியப்பாளையத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர், வீட்டில் இருந்தபடியே மென்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
  • தனது மனைவி சுகந்தியுடன் வெளியே சென்ற சத்திய மூர்த்தி, சுல்தான்பேட்டையில் உள்ள உணவகம் ஒன்றில், பிரைடு ரைஸ் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
  • காலையில் நீண்ட நேரமாகியும் சத்திய மூர்த்தி கண் விழிக்காததால் அதிர்ச்சியடைந்த சுகந்தி, வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுச் சென்றார்.
  • அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சத்திய மூர்த்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
  • இதனிடையே, துரித உணவு சாப்பிட்டதால் தான், கணவர் உயிரிழந்ததாக வில்லியனூர் காவல் நிலையத்தில் சுகந்தி புகார் அளித்தார்.
  • சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார், சத்திய மூர்த்தியின் உடலை இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • மேலும், அவரது உறுப்புகளை ஹைதராபாத்தில் உள்ள மத்திய அரசின் உடல் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைத்த மருத்துவர்கள், பிரைட் ரைஸ் சாப்பிட்டு இறந்தாரா? என்பது குறித்து உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகு தெரியவரும் என்றனர்.

Next Story

மேலும் செய்திகள்