பாலஸ்தீனியப் பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேல்... கல்வி பயின்று வந்த குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறி

x

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியப் பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது...

பெத்லஹேமில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த பள்ளி கட்டடமானது சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகவும், அங்கு படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஆபத்துள்ளதாகவும் கூறி அப்பள்ளியை இடிக்க இஸ்ரேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் இஸ்ரேல் அதிகாரிகள் அப்பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கினர். இதனால் அங்கு கல்வி பயின்று வந்த குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பள்ளி இருந்ததற்கான தடயமே இல்லாமல் இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்தால் பாலஸ்தீனியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்