ஈஷா யோகா மையம் சென்ற பெண் பலியான சம்பவம் - சுபஸ்ரீ மரணத்திற்கு காரணம் என்ன?

x

ஈஷா யோகா மையம் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் பலியான சம்பவத்தில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரை சேர்ந்த பழனிக்குமார் என்பவரின் மனைவி சுபஸ்ரீ கோவை ஈஷா மையத்திற்கு யோகா பயிற்சிக்காக வந்த நிலையில் திடீரென கடந்த மாதம் 18ஆம் தேதி மாயமானார். இதனிடையே தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அவரை தேடி வந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் எரியூட்டப்பட்ட நிலையில் சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணம் என்ன? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அவர் கடைசியாக சென்ற கால் டாக்சி ஓட்டுநரின் செல்போனில் இருந்து கணவருக்கு பேசியதாக கூறப்படும் நிலையில் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்தாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்