"என்னடா இது பெரிய பித்தலாட்டமா இருக்கு?" - ஆன்லைனில் ஆர்டர் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி

x

கோவையில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு, பழைய பட்டன் செல்போன் மற்றும் பழுதடைந்த பேட்டரியும் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், பிரபல ஆன்லைன் ஷாப்பிங் மூலம் செல்போன் ஆர்டர் செய்துள்ளார்.

இதில், டெலிவிரி செய்யப்பட்ட பெட்டியை, பிரித்து பார்த்த இளைஞர், பெட்டியினுள் பழைய பட்டன் செல்போன் மற்றும் பழுதான பேட்டரி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதை, வீடியோவாக பதிவு செய்து நிறுவனத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தனது பணத்தை திரும்ப தரவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் எனவும் இளைஞர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்