"என் மகன் சாவுக்கு ஆஸ்பத்ரியும் தான் காரணம்..?" - விஷம் வைத்து கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோர்

x

காரைக்காலில் சிறுவன் பாலமணிகண்டன் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் மருத்துவமனையின் அலட்சியமும் ஒரு காரணம் என சிறுவனின் பெற்றோர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்

படிப்பில் தன் மகளை பின்னுக்கு தள்ளிய கோபத்தில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் பாலமணிகண்டனை சக மாணவியின் தாய் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எப்படியும் பிழைத்து விடுவான் என நினைத்து நம்பிக்கையில் இருந்த பெற்றோர் மகனின் திடீர் மரணத்தால் உருக்குலைந்தனர். நன்றாக பேசிக் கொண்டிருந்த மகன், உயிரிழந்ததற்கு காரைக்கால் அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்றும், தன் மகனுக்கு நேர்ந்தது போல இனி யாருக்கும் நடக்கவே கூடாது என்றும் வேதனையுடன், பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்