வாக்குறுதிகளை நிறைவேற்ற ஓர் ஆண்டு போதுமா..? - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

x

கோவையில், திமுக சார்பில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். முதலில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் 96 சதவீத வாக்குகளை பெற்றதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரு பங்கு வாக்குகளை பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசுகையில், இன, மத வேறுபாடு இல்லாமல், கட்சி மற்றும் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக நடத்தி வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்