திமுகவின் துணை பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி.. ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என தகவல்

x

திமுகவின் தற்போதைய சட்ட விதிகளின்படி ஐந்து பேர் துணைப் பொதுச் செயலாளர்களாக இருந்த நிலையில்,திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவில் மகளிருக்கான துணைப் பொதுச்செயலாளர் பிரதிநிதித்துவ அடிப்படையில், கனிமொழி எம்.பி நியமனம் செய்யப்பட உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

திமுகவின் மகளிர் அணி செயலாளராக உள்ள கனிமொழி புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் வரை மகளிர் அணி பொறுப்பையும் கவனிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்