மாயாஜாலமா? ஒரு நொடியில் காணாமல் போன செல்! - என்னதான் நடந்தது..? சிசிடிவியில் கூட சிக்கவில்லை

x

ஆந்திராவில், இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததைபோல நடித்து, உதவ வந்தவரின் செல்போனை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது...

என்.டி.ஆர். மாவட்டம் மயிலவரம் நகரைச் சேர்ந்தவர் சாம்சன். ஓய்வு பெற்ற வங்கி மேலாளரான இவர், தனது வீட்டிற்கு கேஸ் இணைப்பு வாங்குவதற்காக அருகில் உள்ள கேஸ் ஏனென்சிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அவரது குரல் கேட்டு திரும்பிய சாம்சன், இருசக்கர வாகனத்தில் விழுந்தவரை நல்லெண்ணத்தோடு தூக்கிவிட உதவியுள்ளார். இதனிடையே, மற்றொரு நபரும் உதவுவது போல நடித்து, சாம்சனின் சட்டைப் பையில் இருந்த 45 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய செல்போனை திருடிக் கொண்டு, அதே இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்