இது தார் சாலையா? இல்ல போர்வையா?... அப்படியே சுருட்டி மடிக்கலாம் போல..“- கிராம மக்கள் வெளியிட்ட வீடியோ

x

மகாராஷ்ட்ராவில் உள்ள கிராமம் ஒன்றில், தரமற்ற வகையில் தார்ச்சாலை போடப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மகாராஷ்ட்ர மாநிலம் ஜால்னா பகுதியில் உள்ள கிராமத்தில், அண்மையில் தார்ச்சாலை போடப்பட்டது.

இது மிகவும் தரமற்று இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தார்ச்சாலையை கைகளால் எடுத்தபோது போர்வை போன்று பெயர்ந்து வரும் வீடியோவையும் பதிவிட்டுள்ளனர்.

இது, ஷிண்டே-ஃபட்னவீஸ் அரசின் பாலிதீன் வளர்ச்சி மாடல் என மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்