காவல்நிலையமா?... கலவர பூமியா?... கண்ணெதிரே அரங்கேறிய சம்பவம் - கடும் கோபத்தில் அதிரடி காட்டிய போலீஸ்

x

காவல்நிலையமா?... கலவர பூமியா?... என எண்ணும் அளவிற்கு, இருதரப்பு கும்பல் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம், சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் நிகழ்ந்தது. ஆட்டையம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகே, சக்திவேல் என்பவர் தனது நண்பர்களுடன் மதுபோதையில் இருந்தபடி பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, மதுபோதையில், அதே கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்களும், அந்த கடைக்கு வந்துள்ளனர்.இருதரப்பும் போதையில் இருந்ததால், நவீன்குமார் தரப்பு சக்திவேல் தரப்பை விபரீதமாக ஏதோ ஒன்றை கேட்க, ஆத்திரமடைந்த சக்திவேல் தரப்பு, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், மோதல் போக்கு உருவான நிலையில், அங்கிருந்தவர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர். ஆனால், சிறிது நேரம் கழித்து, நவீன்குமார் தரப்பு மீண்டும் வம்புக்கு இழுக்கவே, சக்திவேல் தரப்பினர் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.சக்திவேல் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற சம்பவம் தெரியவரவே, ஆத்திரமடைந்த நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள், காவல்நிலைய வளாகத்திலேயே, எதிர்தரப்பினரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த போலீசார் முயன்றபோதும், துளியும் கண்டுகொள்ளாததால், போலீசார் அதிரடியில் இறங்கினர்.இந்த சம்பவத்தில், இருதரப்பிலும் மண்டை உடைந்த நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.காவல்நிலைய வளாகமே போர்க்களம் போல் காட்சி அளித்ததால், அப்பகுதி பெரும் பரபரப்புக்கு உள்ளானது.


Next Story

மேலும் செய்திகள்