மின் கட்டணத்தில் முறைகேடா..?"ரூ. 3000 EB பில்லுக்கு... ரூ.17000..." - மூதாட்டி அதிர்ச்சி

x

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ரமணி என்பவர் வீட்டிற்கு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மின் பயன்பாட்டு அடிப்படையில் ரமணிக்கு ஏப்ரல் மாதத்தில் 3380 ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு மின்சார வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரால் குறிப்பிட்ட தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில், மின்வாரிய அதிகாரிகள் இணைப்பை துண்டிக்கவில்லை. இதனிடையே ரமணிக்கு ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் 4 ஆயிரத்து 750 ரூபாய் வந்த நிலையில், அவர் மின் கட்டணத்தை செலுத்த மின்சார வாரிய அலுவலகம் சென்றார். அப்போது 17 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த அவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்