ரயில் டிக்கெட் முன்பதிவு | ஆதார் இணைத்தால் இப்படி ஒரு நன்மையா..?

x

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது ஆப் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பை அதிகரித்துள்ளதாக, இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு வசதியாக, ஆதார் இணைக்கப்படாத பயனாளர் ஐ.டி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வரம்பு, 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனாளர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வரம்பு, 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் உள்ள பயணிகளில் ஒருவர் ஆதார் மூலம் சரி பார்க்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்