இறையன்புவை சந்தித்த இறையன்பு... சந்திப்பிலேயே மாணவன் வைத்த கோரிக்கை - அடுத்த நொடியில் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

x

ஆதனூரை சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் இறையன்பு என்பவர், தனது குடும்பத்துடன் தலைமைச் செயலர் இறையன்புவை சந்தித்தார். அந்த மாணவனுக்கு பேனா ஒன்றை பரிசளித்த தலைமைச் செயலர் இறையன்பு, கையொப்பம் இட்டு புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கினார். மேலும், தங்கள் தெருவில் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்ற மாணவன் இறையன்புவின் கோரிக்கையை ஏற்ற தலைமைச் செயலர் இறையன்பு, பழுதடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்