ஐபிஎல் பிளே-ஆஃப் டிக்கெட் விற்பனை - தொழில்நுட்பக் கோளாறால் ரசிகர்கள் அதிருப்தி

x

ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் உடனடியாக விற்றுத் தீர்ந்தன. வருகிற 23 மற்றும் 24ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, நண்பகல் 12 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், சுமார் 1 மணி நேரத்திற்குள்ளாகவே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ரசிகர்கள் பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்