ஐபிஎல் மினி ஏலம்.. பிசிசிஐ அறிவிப்பு

x

2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், வரும் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மினி ஏலத்தில் பங்கேற்க இந்தியா உட்பட 15 நாடுகளை சேர்ந்த 991 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதில் 714 பேர் இந்திய வீரர்கள் என்றும், 277 பேர் வெளிநாட்டு வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 57 பேரும், தென் ஆப்பிரிக்காவில் 52 பேரும், வெஸ்ட் இண்டீசில் 33 பேரும், இங்கிலாந்தில் 31 பேரும் பதிவு செய்துள்ளனர்.

இந்த மினி ஏலத்தில் 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்