இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவருக்கு ஜாமின் வழங்கிய கோர்ட்

x
  • திண்டுக்கல்லில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில், கைதான கலீல் ரகுமானுக்கு, நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
  • கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி, திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், கலீல் ரகுமான் என்ற இளைஞர், கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முன்றார்.
  • பின்னர், அங்கிருந்த ஊழியர் இளைஞரை தாக்கி, போலீசில் ஒப்படைத்தார்.
  • இந்த வழக்கில், ஜாமின் வழங்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கலீல் ரகுமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
  • இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்