லட்சம் ருபாய் முதலீடு 12 ஆயிரம் வருமானம்! "அள்ளிக்கோ அள்ளிக்கோ" என ஆசை வார்த்தை.. மொத்தமாக அள்ளிக்கொண்ட ஜூவல்லரி நிறுவனம்.. ஆவேசமாக கோரிக்கை வைத்த பெண்கள்

x

சென்னையில் ஏ.ஆர்.டி ஜூவல்லரியில் பணத்தை இழந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் இயங்கி வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லரி நிறுவனம், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 12 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி அறிவிப்பை வெளியிட்டது. இதை நம்பி 427 பேர், 6.5 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர், தொடக்கத்தில் சரியாக வட்டி செலுத்தி வந்த அந்த நிறுவனம், பின்னர் வட்டி தருவதை நிறுத்தி விட்டது. இந்நிலையில், நிறுவனத்தின் இயக்குனர்களான ஆல்வின் மற்றும் ராபின் ஆரோன் ஆகியோரைக் கைது செய்து, தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்