போன் செயலி மூலம் அறிமுகமாகி.. 70 ஆயிரம் ரூபாய் பறிப்பு - சிறுவனுடன் சேர்ந்து 4 பேர் பகீர்

x

சீர்காழியில் போன் செயலி மூலம் அறிமுகமாகி 70 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர், மொபைல் செயலி மூலம் அறிமுகமாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜீன் ஒன்பதாம் தேதி விக்னேஷை சந்திக்க, சீர்காழிக்கு நால்வரும் அழைத்துள்ளனர். சீர்காழிக்கு சென்ற விக்னேஷை தாக்கி, கத்தியால் மிரட்டி ஏடிஎம் கார்டை பறித்து நால்வரும் தப்பித்து சென்றுள்ளனர். இதையடுத்து வங்கிக்கணக்கில் இருந்து 70 ஆயிரம் பணத்தை திருடி விட்டதாக, நால்வர் மீதும் விக்னேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், புகார் அளிக்கப்பட்ட நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்