மது போதையில் காவலரை தாக்க பாய்ந்த இளைஞர் - சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு

x

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிச் சென்றவர்களை கண்டித்த காவல் உதவி ஆய்வாளரை 4 பேர் தாக்க முயன்ற சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிபுவர் காளிதாஸ்.

இவர், அண்ணாசாலை அருகே மது போதையில் தாறுமாறாக சென்ற 4 பேரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் காளிதாஸை தாக்க முயன்றுள்ளனர்.

இதையடுத்து, காவல் கட்டுபாட்டு அறைக்கு காளிதாஸ் தகவல் அளித்துள்ளார்.

உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாலாஜி என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

மேலும், தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்