போதையில் வீட்டின் முன்பு வாந்தி.. கேட்டவர் காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம்

x

கன்னியாகுமரி அருகே மதுபோதையில் வீட்டின் முன்பு வாந்தி எடுத்த நபரை வீட்டின் உரிமையாளர் திட்டியதால், அவரின் கார் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரணியல் அருகே குதிரைப்பந்தி விளையை சேர்ந்தவர் வெங்கடேஷ்.

இவர் வீட்டின் முன்பு, அதே பகுதியை சேர்ந்த அனீஷ்குமார் என்பவர் மதுபோதையில் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.

இதை வெங்கடேஷ் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அனீஷ்குமார், அவரின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த அனீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்