போதையில் கத்திகுத்து விளையாட்டு...நண்பரை கொலை செய்து விட்டு ஓட்டம் - பட்டப்பகலில் நடந்த இரட்டை கொலைகள் - சென்னையில் பயங்கரம்

x

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மதுபான கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, 2 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கோழி செல்வம், மனோஜ் ஆகிய இருவரும், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்தினார்கள். போதையில் இருந்த இருவரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் மாறி மாறி குத்துவது போன்று விளையாடினார். அப்போது, போதையில் தடுமாறிய செல்வம், மனோஜை கத்தியால் குத்தினார். அவரைத் தடுக்க வந்த 60 வயது முதியவரையும் செல்வம் குத்தி விட்டு தப்பி ஓடினார். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், கோழி செல்வத்தை விரட்டிச்சென்று பிடித்து கைது செய்தனர். பட்ட பகலில் நடந்த இரட்டைக் கொலையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்