போதையில் இருந்த அலுவலர்...ஆய்வுக்கு வந்த அதிகாரியுடன் மோதல் - வைரலாகும் வீடியோ

x

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே நியாயவிலைக் கடை ஊழியருக்கும், வட்ட வழங்கல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செல்லாத்தூர் அரசு நியாய விலை கடையில் கஜேந்திரன் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று பணியில் இருந்த போது, அங்கு ஆய்வு செய்வதற்காக வந்த ஆர்.கே.பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் திருவேங்கடம், கஜேந்திரனை மது போதையில் கண்ணிய குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்