மணிப்பூரில் ஜூன் 25 வரை இணையசேவை முடக்கம்

x

மணிப்பூரில் இணையச்சேவை முடக்கம், ஜூன் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது


மணிப்பூர் மாநிலத்தில், பழங்குடி அல்லாத மெய்தி இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி கலவரம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், வன்முறை தொடர்பாக போலி வீடியோக்கள் இணையத்தில் பரவியதால், இணைய சேவை முடக்கப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கபட்டது. மணிப்பூரில் ஒன்றரை மாதமாக பதற்றம் நிலவி வரும் நிலையில், ஏற்கெனவே ஜூன் 20-ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மேலும் ஐந்து நாட்கள் இணைய சேவை முடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்