இரண்டு நாட்டிற்கு தண்ணி காட்டிய கடத்தல் குடும்பம்.. காத்திருந்து தட்டி தூக்கிய போலீஸ்..!

x

இரண்டு நாட்டிற்கு தண்ணி காட்டிய கடத்தல் குடும்பம்.. காத்திருந்து தட்டி தூக்கிய போலீஸ்..!


மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் மன்னன் El Chapo Guzman-ன் மகனை மீண்டும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்த நிலையில், நாடு முழுவதும் பதற்றம் தொற்றியுள்ளது...

பல்லாயிரம் கோடிக்குச் சொந்தக்காரரான போதைப் பொருள் கடத்தல் காரர் "வாகின் El Chapo Guzman" மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா வழியே போதைப் பொருட்களைக் கடத்துவதில் கில்லாடி... 2014ம் கைது செய்யப்பட்ட El Chapo சுரங்கம் தோண்டி சிறையில் இருந்து தப்பித்த நிலையில், பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவரை போலீசார் கண்டு பிடித்தனர். அவரது மனைவியும் கூட கடந்த 2021ல் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், Ovidio Guzman அல்லது எல் ரேட்டன் என்றழைக்கப்படும் El Chapo-வின் மகனும் குலியாகன் நகரில் கைது செய்யப்பட்டு மெக்சிகோ நகரத்திற்கு ராணுவ விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். 2017 ஆம் ஆண்டில் El Chapo அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டதில் இருந்து அவரது போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை நடத்த உதவியாக இருந்த 32 வயதான எல் ரேட்டன், புலனாய்வுத் துறையின் 6 மாத கால தீவிர நடவடிக்கையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கான டன் போதைப் பொருட்களை அமெரிக்காவிற்கு கடத்தியதற்காக El Chapo அமெரிக்காவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்