சர்வதேச அளவில் சம்பவம்..! - விஜயகாந்த் மகனின் புதிய அவதாரம்...

உலகப்புகழ்பெற்ற ஹிப்ஹாப் இசைக்கலைஞரான கர்டிஸ் பிஃப்டி சென்ட், தனது உலகளாவிய இசைக்கச்சேரியின் ஒரு பகுதியாக, இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் அரங்கில், நவம்பர் 25ஆம் தேதி பிஃப்டி சென்ட்டின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன், இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க, ட்ராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் இணைந்துள்ளார். இந்த கூட்டணியின் மூலமாகவே, மும்பையில் நடைபெறும் முதல் கான்சர்ட்டில், பிஃப்டி சென்ட் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com